புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே நடைபெற்ற முத்துமாரியம்மன் தேரோட்ட விழாவில் ஏராளமான பக்தர்கள் தேரின் வடம் பிடித்து இழுத்தனர். ஆலங்குடியை அடுத்த வடகாடு, முத்துமாரியம்மன் சித்திரை திருவிழா கடந்த ஞாயிற்றுகிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதன் முக்கிய திருவிழாவான தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. விழாவில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் அம்மனின் தேரை பக்தி பரவசத்தோடு இழுத்து வழிபட்டனர். தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் திரௌபதியம்மன் கோயில் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.