பாபநாசம் : சுவாமிமலை அருகே அரசு தடை செய்த 150 கிலோ போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சை மாவட்ட எஸ்பி ரவளிப்பிரியா உத்தரவின் பேரில் கும்பகோணம் டிஎஸ்பி அசோகன் மேற்பார்வையில் சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் மற்றும் போலீசார் சுவாமிமலை காவல் சரகம் பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சுவாமிமலை அருகே உள்ள பாபுராஜபுரம் வீரா நகரில் ஒரு வீட்டில் போதை பொருட்கள் இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின்படி வீட்டை சோதனை செய்தனர்.