சென்னை: சென்னை வேளச்சேரியில் உள்ள காப்புக்காட்டில் வன துறையின் எவ்வித விதிகளையும் பின்பற்றாமல் அந்த துறைக்கான தலைமை அலுவலக கட்டிடம் கட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்திருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. கிண்டி தேசிய பூங்காவை ஒட்டியுள்ள வேளச்சேரி காப்புக்காட்டில் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் 2019-21 கால கட்டத்தில் இந்த பிரம்மாண்டமான கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. சுமார் 30 கோடி ரூபாய் அளவில் கட்டப்பட்ட இந்த 5 அடுக்கு கட்டிடம் 21471 சதுர ஆடி பரப்பளவு கொண்டது. தமிழ்நாடு வனத்துறைக்கான இந்த தலைமை கட்டிடம் குறைந்தபட்சம் வனத்துறையின் விதிகளை கூட பின்பற்றாமல் கட்டப்பட்டது தெரிய வந்துள்ளது. மாவட்ட வன அலுவலரின் அனுமதி கூட பெறவில்லை என்றும் town and country planning சட்டத்தின் கீழும் அனுமதி பெறவில்லை என வன மற்றும் சுற்றுசூழல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.