திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அருகே இலுப்பப்பட்டியைச் சேர்ந்தவர் கந்தசாமி (53). வேளாண்மைத்துறை அதிகாரி. இவர், கடந்த 19ம் தேதி, திண்டுக்கல்லில் கலெக்டர் விசாகனை சந்தித்து, அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எனது மகன் பிரதீப் (25), பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள தவோ மெடிக்கல் ஸ்கூல் பவுண்டேசன் கல்லூரியில், கடந்த 2016 முதல் மருத்துவ படிப்பு படித்து வந்தார். வரும் ஜூலை மாதத்துடன் படிப்பு முடிகிறது.