திருப்பத்தூர்: திருப்பத்தூர் கலெக்டர் பங்களாவில் பாம்பு புகுந்ததால் தீயணைப்பு வீரர்களுடன் சேர்ந்து கலெக்டர் பாம்பு பிடித்த சம்பவம் பரபரப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது. திருப்பத்தூர் அடுத்த கதிரிமங்கலம் ஊராட்சி சி.கே. ஆசிரமம் அருகே மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாகா குடியிருப்பு உள்ளது. இந்நிலையில் நேற்று மாலை கலெக்டர் பங்களா வீட்டிற்கு செல்லும்போது திடீரென 10 அடி நீளமுள்ள விஷத்தன்மை கொண்ட பாம்பு ஒன்று அவரது வீட்டிற்குள் செல்ல முயன்றது. இதைப்பார்த்த கலெக்டர் திருப்பத்தூர் தீயணைப்புதுறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தார்.