கூடுவாஞ்சேரி: மக்களின் தாகத்தை தணிப்பதற்காக, செங்கல்பட்டு எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் 7 ஊராட்சிகளில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். கோடை காலத்தை முன்னிட்டு மக்களின் தாகத்தை தணிக்கும் வகையில், செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் மண்ணிவாக்கம், வண்டலூர், கீரப்பாக்கம், குமிழி, கல்வாய், பெருமாட்டுநல்லூர், ஊரப்பாக்கம் ஆகிய ஊராட்சிகளில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நேற்று நடந்தது. காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் வி.எஸ்.ஆராமுதன் தலைமை தாங்கினார். திமுக ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர்கள் ஜே.வி.எஸ்.ரங்கநாதன், எம்.டி.சண்முகம், ஓட்டேரி குணா, கே.எஸ்.ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.