திண்டுக்கல்: நிலக்கோட்டை அருகே இளைஞர் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் தொழிலதிபர் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அடுத்து கொடைரோடு ரயில்வே பாலம் அருகே வெட்டுக் காயங்களுடன் இளைஞரின் சடலம் மீட்கப்பட்டது. சிசிடிவி காட்சி மூலம் அம்மையநாயக்கனூரில் இருந்து நிலக்கோட்டை சாலையில் நள்ளிரவு 12.30 மணிக்கு சென்ற கார், கொடைரோடு சுங்கச்சாவடியை கடந்து சென்றது தெரியவந்துள்ளது. அந்த காரின் உரிமையாளரான முருகனை பிடித்து விசாரித்ததில், பல்லடத்தில் முருகன் நடத்தி வந்த ஹோட்டலில் தேனி மாவட்டம், போடிநாயக்கனூரை சேர்ந்த முத்து என்பவர் பணியாற்றி வந்துள்ளார்.