ஜெனிவா: ரஷ்யா - உக்ரைன் போரால் வளரும் நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா கவலை தெரிவித்துள்ளது. . பிப்ரவரி 24 -ம் தேதி தொடங்கிய உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. உக்ரைனில் கடந்த ஏழு வாரங்களுக்கு மேலாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் இராணுவ வீரர்கள் ரஷ்யாவின் தாக்குதலுக்குப் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், உக்ரைனில் நிலவும் மனிதாபிமான நெருக்கடி குறித்து ஆலோசிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர துணை பிரதிநிதி ரவீந்திரா, இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைத்து பேசினார்.