டெல்லி: டெல்லியில் அனுமன் யாத்திரையின் போது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கையில் பயங்கர ஆயுதங்களோடு பேரணியாக சென்று கலவரத்தில் ஈடுபட்டதும், போலீசாரை வன்முறை கும்பல் துப்பாக்கியால் சுட்ட காட்சிகளும் வெளியாகியுள்ளன. நாடு முழுவதும் நேற்று முன்தினம் அனுமன் ஜெயந்தி கொண்டாடப்பட்டது. அந்த வகையில் டெல்லியில் உள்ள சஹாங்கீர்பூரி பகுதியில் நடைபெற்ற அனுமன் யாத்திரையில் கலவரம் வெடித்தது. இருதரப்பினர் இடையே நடைபெற்ற கல்வீச்சு தாக்குதலில் ஏராளமானோர் காயமடைந்தனர். கலவரக்காரர்கள் துப்பாக்கியால் சுட்டதில் போலீஸ்காரருக்கும் காயம் ஏற்பட்டது. சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.