அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி ஒன்றியப் பகுதிகளில் முருங்கை காய் சீசனுக்காக மரங்களில் முருங்கை பூக்கள் பூத்துக் குலுங்குகின்றது. அரவக்குறிச்சி பகுதியில் ஆலமரத்துப்பட்டி, ஈசநத்தம், கோவிலூர், சாந்தப்பாடி, நாகம்பள்ளி, வெஞ்சமாங்கூடலூர் உள்ளிட்ட 20 ஊராட்சிகளில் 30 ஆயிரம் ஏக்கருக்கு மேல் முருங்கை பயிரிடப்படுகின்றது. இப்பகுதி முருங்கைக்காய் திரட்சியாகவும், சுவையாகவும் இருக்கும் என்பதால் தமிழகம் மாவட்டத்தில் மட்டுமல்லாமல், அண்மை மாநிலங்களிலும் அரவக்குறிச்சி பகுதி முருங்கை காய்க்கு தனி சிறப்பு உள்ளது.