புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவை செயலருக்கு நிதி அதிகாரங்களை பயன்படுத்துவதற்கான ஆணையை கடந்த 1981ம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கியிருந்தது. ஆனால் இந்த ஆணை நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதற்கு முன் இருந்த சபாநாயகர்கள் ராமச்சந்திரன், கண்ணன் ஆகியோர் இதற்கான முயற்சியை எடுத்தனர். ஆனாலும் நிறைவேறவில்லை. இது சபாநாயகர் செல்வம் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. தலைமை செயலர், நிதி செயலர், சட்டத்துறை செயலர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் சட்டசபை செயலகத்துக்கு நிதி அதிகாரம் வழங்குவதற்காக ஆலோசிக்கப்பட்டது. பின்னர் இதற்கான கோப்புகள் தயாரிக்கப்பட்டு ஒப்புதலுக்கு மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.