திருப்பதி: வசந்த உற்சவத்தை முன்னிட்டு தங்கத் தேரோட்டம் 30 ஆதி தங்க தேரில் உலா வந்த மலையப்ப சாமி தேரை வடம் பிடித்து இழுத்த பெண்கள். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கோடை கால துவக்கத்தில் வசந்த உற்சவம் மூன்று நாட்கள் நடைபெறுவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக வசந்த உற்சவம் உள்ளிட்ட வைபவங்கள் நடைபெறாமல் இருந்து வந்தன. இந்தநிலையில் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் நடைபெறும் வசந்த உற்சவம் இந்த ஆண்டு ஏழுமலையான் கோவிலில் இன்று துவங்கி நடைபெறுகிறது. வசந்த உற்சவத்தை முன்னிட்டு ஏழுமலையான் கோவில் பின்புறம் இருக்கும் வசந்த உற்சவம் மண்டபத்தை தேவஸ்தான தோட்டத்துறையினர் சேஷாசலம் வனப்பகுதியை போல் அலங்கரித்து உள்ளனர். உற்சவத்தின் முதல் நாளான மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி சமேதராக கோவில் மாட வீதிகள் வழியாக வசந்த மண்டபத்தில் உற்சவர் மலையப்ப சுவாமியின் தர்பார் நடத்தப்பட்டது.