வேலூர்: சாராய விற்பனையை தடுக்காததால் வாணியம்பாடி காவல்நிலையத்தில் இன்ஸ்பெக்டர் உட்பட போலீசார் 30 பேரை கூண்டோடு மாற்றம் செய்து வேலூர் சரக டிஐஜி ஆனிவிஜயா அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் கடந்த பல ஆண்டுகளாக சாராய விற்பனை கொடிகட்டி பறந்து வருகிறது. சாராய வியாபாரியான மகேஷ்வரி என்பவர் 8 முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது 80 வழக்குகள் நிலுவையில் உள்ளது. ஆனாலும் வாணியம்பாடி பகுதியில் தொடர்ந்து சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்தார். அப்பகுதி மக்கள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சாராய பாக்கெட்டுகளை சாலையில் போட்டு உடைத்து எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து மகேஷ்வரி கைது செய்யப்பட்டார்.