அசாம்: ஒன்றிய அரசின் இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனம் முழுவதும் உள்நாட்டு தயாரிப்பாக உருவாக்கியிருக்கும் விமான சேவை முதல்முதலாக வணிகரீதியான பயன்பாட்டை தொடங்கியுள்ளது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட டோர்னியர்-228 ரக விமானம் முதல்முறையாக மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்தியாவில் போயிங், ஏர்பஸ் போன்ற வெளிநாட்டு நிறுவனங்களின் விமானங்களை கொண்டு தான் பயணிகள் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட விமானத்தை கொண்டு இன்று முதல் போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் முழுமையும் தயாரிக்கப்பட்ட டோர்னியர்-228 ரக விமானத்தை அசாமின் திப்ரூகர்-அருணாச்சலப்பிரதேசத்தின் பாசிகாட் இடையே அலையன்ஸ் ஏர் நிறுவனம் இயக்கவுள்ளது.