திருத்துறைப்பூண்டி : திருத்துறைப்பூண்டி காவல்நிலையம், காவலர் குடியிருப்பு பகுதி செல்லும் சாலை மழையால் சேறும் சகதியாக மாறியதால் சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் காவல்நிலையம், காவலர் குடியிருப்பு கட்டும்போது எதிரே உள்ள மன்னை சாலை உயரம் குறைவாக இருந்தது. தற்போது இந்த சாலை உயரமாகிவிட்டதால் காவல்நிலையம், காவலர் குடியிருப்பு பகுதி செல்லும் சாலையில் சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு உள்ள மண் சாலை மழை பெய்கிறபோதெல்லாம் மழைநீர் தேங்கி வடிய வசதி இல்லததால் காவல்நிலையம், குடியிருப்பு பகுதிக்கு செல்லும் சாலை சேறும் சகதியுமாகிவிடும்.