ஸ்ரீநகர்: ஸ்ரீநகரில் பீஷம்பர் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் சிஆர்பிஎப், ஸ்ரீநகர் போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கினர். அப்போது அங்கு மறைந்திருந்த தீவிரவாதிகள் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். சிஆர்பிஎப் வீரர்களும் போலீசாரும் பதில் தாக்குதல் கொடுத்தனர். இதில், பாகிஸ்தானை சேர்ந்த 2 லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.