மரக்காணம்: மரக்காணம் அருகே தேங்காய் நார் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.65 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது. மரக்காணம் அருகே மண்டவாய் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (49). இவர் வீட்டின் அருகில் தேங்காய் நார் தயாரிக்கும் தொழிற்சாலையை கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக நடத்தி வருகிறார். இந்த தொழிற்சாலையில் தினமும் 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலையில் வழக்கம்போல் தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டு இருந்துள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக தொழிற்சாலையின் அருகில் இருந்த மின்மாற்றியில் இருந்து தீ பொறிகள் கொட்டியுள்ளது. இதன்காரணமாக மின்மாற்றியின் அருகில் இருந்த தேங்காய் நார் பஞ்சுகள் தீப்பற்றி எர்ந்துள்ளது. அப்போது காற்றின் வேகமும் அதிகமாக இருந்ததால் தீ மளமளவென்று அருகில் இருந்த பஞ்சி குவியலில் பரவியுள்ளது.