ஹைதராபாத் : தெலுங்கானா மாநிலத்தில் வடக்கு மின் விநியோக நிறுவனம் (NPDCL) மற்றும் தெற்கு மின் விநியோக நிறுவனம் (SPDCL) ஆகியவை மின் கட்டணத்தை 18% உயர்த்தக் கோரி மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் (TSERC) கோரிக்கைகளை சமர்ப்பித்தனர். ஆனால், மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின் கட்டணத்தை 14% மட்டுமே உயர்த்த அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம் தெலங்கானா மாநிலத்தில் 6 ஆண்டுகளுக்கு பிறகு மின் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. இந்த மின் கட்டண உயர்வு ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வந்ததாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.