குன்னூர்: குன்னூர் அருகே தூதூர்மட்டம் பகுதியில் அந்தரத்தில் பறந்து வந்த காரை பார்த்து தோட்ட தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர்தான் அது சினிமா சூட்டிங் எனத் தெரிந்து நிம்மதி அடைந்தனர். மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சினிமா படப்பிடிப்பு களை கட்டியுள்ளது. தற்போது ஊட்டி, குன்னூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் மலையாளம், தமிழ், தெலுங்கு திரைப்படங்களின் சூட்டிங் நடந்து வருகிறது.
குன்னூர் அருகே தூதூர்மட்டம் பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் நாகார்ஜுனா நடிக்கும் தெலுங்கு படம் சூட்டிங் கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது. நேற்று பிற்பகல் தேயிலைத் தோட்டத்தில் பயங்கர சத்தத்துடன் கார் ஒன்று 200 மீட்டர் தூரம் அந்தரத்தில் பறந்து வந்து தேயிலைத் தோட்டத்தில் விழுந்தது.