அண்ணா மறுமலர்ச்சி திட்ட ஆலோசனைக் கூட்டம்

வாலாஜாபாத்: வாலாஜாபாத் ஒன்றியம்,  வாரணவாசி ஊராட்சியில் தமிழக அரசின் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2021 -22 ஆண்டுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து கிராம குழு கூட்டம் கிராம சேவை மைய கட்டிடத்தில்  நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் பிரேமா மோகனசுந்தரம் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு தலைவர் தேவேந்திரன், ஒன்றிய குழு துணைத் தலைவர் சேகர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அமுல்ராஜ், ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ஊராட்சியில் சுகாதாரப் பணிகள், மின்விளக்கு ஊராட்சியை மேம்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், மத்திய, மாநில அரசின் திட்டங்களை ஊராட்சி மக்களிடம் எவ்வாறு செயல்படுத்துவது என்பது உள்பட பல்வேறு திட்டப் பணிகள் குறித்து விளக்கிப் பேசினார்.

Related Stories: