சண்டிகர்: சண்டிகரை தங்கள் மாநிலத்துடன் இணைக்கக்கோரி பஞ்சாப் சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு போட்டியாக, அரியானாவும் ஒரு நாள் சிறப்பு சட்டபேரவை கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. பஞ்சாப்பில் இருந்து அரியானா பிரிக்கப்பட்ட போது, இரு மாநிலங்களுக்கும் பொதுவான தலைநகராக சண்டிகர் இருக்கும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, யூனியன் பிரதேசமான சண்டிகரை பஞ்சாப் 60 சதவீத ஊழியர்களை நியமித்தும், அரியானா 40 சதவீத ஊழியர்களை நியமித்தும் நிர்வகித்து வருகின்றன. ஆனால் தற்போது சண்டிகரை நிர்வகிக்க வேறு மாநில அதிகாரிகளை அதிகளவில் நியமிக்க ஒன்றிய அரசு முயற்சிப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.