நாகர்கோவில்: திமுக மாநில மகளிரணி தலைவர் கனிமொழி எம்.பி நாளை குமரி மாவட்டம் வருகை தருகிறார். நாளை காலை 11 மணிக்கு திருநெல்வேலியில் நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு, பிற்பகல் 1.30 மணியளவில் குமரி மாவட்டம் வருகிறார். முதல் நிகழ்ச்சியாக நாகர்கோவில் அருகே தேரேகால்புதூரில் உள்ள கங்கா கிரான்டியூரில் நடக்கும், முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.