கனிமொழி எம்பி நாளை குமரி வருகை: நீட் எதிர்ப்பு பிரசாரத்தை தொடங்கி வைக்கிறார்

நாகர்கோவில்: திமுக மாநில மகளிரணி தலைவர் கனிமொழி எம்.பி நாளை குமரி மாவட்டம் வருகை தருகிறார். நாளை காலை 11 மணிக்கு திருநெல்வேலியில் நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு, பிற்பகல் 1.30 மணியளவில் குமரி மாவட்டம் வருகிறார். முதல் நிகழ்ச்சியாக நாகர்கோவில் அருகே தேரேகால்புதூரில் உள்ள கங்கா கிரான்டியூரில் நடக்கும், முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

அதைத்தொடர்ந்து மாலை 3 மணிக்கு அம்மாண்டிவிளையில் உள்ள கல்லூரி விழாவில் கலந்து கொள்கிறார். தொடர்ந்து அவர் மாலை 6 மணிக்கு நாகர்கோவிலில் நீட் தேர்வு, தேசிய கல்வி கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமைகள் மீட்பு பிரசார பயணத்தை தொடங்கி வைக்கிறார். கனிமொழி எம்பிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க குமரி மாவட்ட திமுகவினர் ஏற்பாடுகளை ெசய்து வருகின்றனர்.

Related Stories: