கிருஷ்ணகிரியில் அதிமுக எம்எல்ஏ கே.பி.முனுசாமி உண்ணாவிரத போராட்டம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே அரசு சார்பில் சிப்காட்தொழிற்பேட்டை அமைக்கப்படுகிறது. இதற்காக உத்தனப்பள்ளி, நாகமங்கலம், அயர்ணப்பள்ளி ஆகிய ஊராட்சியில் உள்ள 5,000 விவசாய குடும்பங்களின் விளை நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது.

இதனை கண்டித்து வேப்பனப்பள்ளி தொகுதி அதிமுக எம்எல்ஏ கே.பி.முனுசாமி, சூளகிரி தாலுகா அலுவலகம் முன் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். காலை 6.30 மணியளவில் இந்த உண்ணாவிரத போராட்டத்தை தனிமையில் அவர் தொடங்கியுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: