மதுரை: மனைவியை கொன்றவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்தது. மகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை கோர்ட் உறுதி செய்தது. சிறுமியான மகளை வன்கொடுமை செய்ததை கண்டித்த மனைவியை கொன்றவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. பாலியல் வன்கொடுமைக்காக புதுக்கோட்டை நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையையும் எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது.