சென்னை: சென்னையில் நேற்று தொமுச பொருளாளர் நடராஜன், சிஐடியு மாநில பொதுச்செயலாளர் ஆறுமுக நாயினார் ஆகியோர் கூட்டாக நிருபர்களுக்கு அளித்த பேட்டி: இன்றும் (நேற்று), நாளையும் (இன்று) மத்திய தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தை அறிவித்திருந்தன. அதனடிப்படையில் தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தம் வெற்றிகரமாக நடந்தது. 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் முழுமையாக இயங்கவில்லை. இந்தசூழலில் பள்ளிகளில் தேர்வு நடக்கிறது. பொதுமக்களுக்கும் பல்வேறு சிரமங்கள் உள்ளன என்ற கருத்துகள், கோரிக்கைகள் வருகிறது. எனவே, நாளை நடைபெறக்கூடிய வேலைநிறுத்த திட்டத்தை மாற்றி அமைக்கிறோம்.