சென்னை: வரும் 28,29-ம் தேதி பணிக்கு வராத தமிழக அரசு ஊழியர்களுக்கு ஊதியம் இல்லை என தலைமைச் செயலாளர் இறையன்பு அறிவித்துள்ளார். மேலும், வரும் 28, 29-ம் தேதிகளில் பணிக்கு வந்தோர், வராதோர் பட்டியலை துறைவாரியாக அனுப்பி வைக்க வேண்டும் எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து, மின்வாரியத்துறை ஊழியர்கள் மார்ச் 28, 29-ம் தேதி கட்டாயம் பணிக்கு வர வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவது, தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை கைவிடுவது உள்ளிட்ட மத்திய அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்தும் 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் வரும் 28 மற்றும் 29-ம் தேதிகளில் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஒன்றிய அரசு ஊழியர்கள் ஈடுபட உள்ளனர்.