குன்னூர்: குன்னூரில் கனமழை காரணமாக 10 வீடுகளில் வெள்ளம் புகுந்தது. நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் நேற்று வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டு சுமார் 2 மணி நேரம் கனமழை பெய்ததது. மாடல் ஹவுஸ் பகுதியில் அரசு மற்றும் ஓடை நிலத்தினை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டியுள்ளதால் மழை நீர் செல்ல வழியில்லாத சூழல் உள்ளது. இதனால் 10க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்து குடியிருப்புகள் சேதமடைந்தது.