குன்னூரில் கனமழை 10 வீடுகளில் வெள்ளம் புகுந்தது

குன்னூர்: குன்னூரில் கனமழை காரணமாக 10 வீடுகளில் வெள்ளம் புகுந்தது. நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் நேற்று வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டு சுமார் 2 மணி நேரம் கனமழை பெய்ததது. மாடல் ஹவுஸ் பகுதியில் அரசு மற்றும் ஓடை நிலத்தினை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டியுள்ளதால் மழை நீர் செல்ல வழியில்லாத சூழல் உள்ளது. இதனால் 10க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்து குடியிருப்புகள் சேதமடைந்தது.

மேலும் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு தண்ணீர் இருந்ததால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளானார்கள். வீடுகளில் புகுந்த தண்ணீரை மோட்டார் வைத்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு நகராட்சி ஆணையாளர் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் சென்று ஜேசிபி மூலம் அடைப்புகளை சீரமைத்தனர்.

Related Stories: