தேனி: போடி அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் பற்றியெரியும் காட்டுத்தீயால் அரியவகை மரங்கள் முற்றிலுமாக எரிந்து சேதமாகி வருகின்றன. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள போடிமெட்டு, ஊத்தாம்பாறை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 15 நாட்களாக காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. நேற்று நள்ளிரவு முதல் அருங்குளம் வடமலை நாச்சியார் கோயில் மலைப்பகுதிகளில் புதிதாக காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. இங்கு வனவிலங்குகள் அதிகளவில் இருக்கும் நிலையில் அவை குடியிருப்பு பகுதிகளுக்கு இடம்பெயர்கின்றன.