தேர்தல் முடிந்ததும் பசுத்தோல் உதிர்ந்துவிட்டது: ஒன்றிய அரசுக்கு கமல் கண்டனம்

சென்னை: மாநில தேர்தல்கள் முடிந்ததும் டீசல், காஸ் விலை ஏற்றப்பட்டுள்ளது. இதையடுத்து ஒன்றிய அரசுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘தேர்தல்கள் முடிந்தன. இதோ பசுத்தோல் உதிர்ந்துவிட்டது. பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வு தொடங்கிவிட்டது. கச்சா எண்ணெய் விலை உயர்வு என்பார்கள். ஆனால், அது கீழே இறங்கியபோதும் விலையைக் குறைக்கவில்லை இவர்கள். அதில் சேர்த்த லட்சம் கோடிகளை வைத்து இப்போது சரிக்கட்டலாமே’ என்று கூறியுள்ளார்.

Related Stories: