உத்தராகண்ட் மாநில முதல்வராக புஷ்கர் சிங் தாமி மீண்டும் தேர்வு

டேராடூன்: உத்தராகண்ட் மாநில முதல்வராக பாஜகவின் புஷ்கர் சிங் தாமி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். டேராடூனில் நடைபெற்ற பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் புஷ்கர் சிங் தாமி தேர்வு செய்யப்பட்டார். உத்தராகண்ட் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 47 இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்தது. சட்டப்பேரவை தேர்தலில் தோல்வியுற்ற நிலையிலும் புஷ்கர் சிங் தாமி முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார்.      

Related Stories: