லஞ்ச வழக்கில் சிக்கிய போக்குவரத்து துணை ஆணையர் நடராஜன் டிரான்ஸ்பர்

சென்னை: சென்னை போக்குவரத்து துணை ஆணையர் நடராஜனை திருநெல்வேலிக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை  மாவட்டம், துணை போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் ஆணையர் நடராஜன்   தன்னுடைய அலுவலகத்தில் பணிபுரியும் உதவியாளர்களிடமிருந்து  கண்காணிப்பாளர்  பதவி உயர்வுக்காக லஞ்சம் பெறுவதாக லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு ரகசிய தகவல்  கிடைத்தது. அதன்படி துணை போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் சமீபத்தில்  திடீர் என சோதனை நடத்தி கணக்கில் வராத பணத்தை கைப்பற்றினர். மேலும்  இதுதொடர்பாக தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில போக்குவரத்து  துறை துணை ஆணையர் நடராஜன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக  தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவில், ‘போக்குவரத்து துறை துணை ஆணையர்  நடராஜன் திருநெல்வேலிக்கு மாற்றப்பட்டுள்ளார். திருநெல்வேலியில்  பணியாற்றும் துணை ஆணையர் ரஜினிகாந்த் விழுப்புரத்துக்கும், விழுப்புரம்  போக்குவரத்து  துணை ஆணையராக இருந்த நெல்லையப்பன் சென்னைக்கும்  மாற்றப்பட்டுள்ளனர்’ எனக்கூறப்பட்டுள்ளது.

Related Stories: