திருமலை: தெலங்கானா மாநிலத்தில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் தெலங்கானா ராஷ்டிர சமிதி(டிஆர்எஸ்) ஆட்சி நடைபெறுகிறது. அங்கு தனிப்பெரும் கட்சியாக விளங்கி வந்த டிஆர்எஸ்க்கு மாற்று சக்தியாக தற்போது பாஜ உருவெடுத்து வருகிறது. இதனிடையே, நிஜாமாபாத் மாவட்டத்தில் உள்ள போதான் பகுதியில் பாஜ சார்பில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் உருவச்சிலை நேற்று முன்தினம் இரவோடு, இரவாக அமைக்கப்பட்டது. இச்சிலையை பாஜ எம்பி அர்விந்த் தர்மபுரி நேற்று திறந்து வைப்பதாக இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை பாஜவினர் செய்து கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த டிஆர்எஸ் கட்சி தொண்டர்கள் அதை தடுத்து நிறுத்த முயன்றனர். இதனால், இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது.