ஐபிஎல் முதல் போட்டியில் மொயின் அலி மிஸ்சிங்

15வது சீசன் ஐபிஎல் தொடர் வரும் 26ம்தேதி மும்பையில் தொடங்குகிறது. இதில் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோத உள்ளன. இந்நிலையில் சிஎஸ்கே ஆல்ரவுண்டர் மொயின் அலி முதல் போட்டியில் ஆடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. விசா இன்னும் கிடைக்காததால் அவரின் வருகை தாமதமாகி உள்ளது.

அவர் பிப்.28ம் தேதி தான் இந்தியா வர விசாவிற்கு விண்ணப்பித்தார். இன்னும் அவருக்கு பயண ஆவணங்கள் கிடைக்கவில்லை. விரைவில் அவர் அணியில் இணைவார் என நம்புகிறோம் என சிஎஸ்கே நிர்வாக அதிகாரி காசிவிஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இதனால் அவர் முதல் போட்டியில் ஆடமாட்டார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.

Related Stories: