கோவை மாவட்டம் சிறுவாணி சாலையில் சென்ற அரசுப் பேருந்தை வழிமறித்த குட்டியானை!: சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்..!!

கோவை: சிறுவாணி சாலையில் சென்ற அரசுப் பேருந்தை குட்டியானை ஒன்று வழிமறித்த நிகழ்வு அரங்கேறியுள்ளது. கோவை மாவட்டம் சிறுவாணி சாலையில் உள்ள சாடிவயல் பகுதியில் 5 மலை கிராமங்கள் உள்ளது. இந்த மலை கிராமங்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை சாடிவயல் பகுதியில் இருந்து வெள்ளப்பதி நோக்கி அரசுப் பேருந்து ஒன்று சென்றுள்ளது.

அப்போது திடீரென வனப்பகுதிக்குள் இருந்து வந்த குட்டியானை ஒன்று பேருந்தை வழிமறித்து விரட்டியது. இதனால் பேருந்து பின்னாள் நோக்கி சென்றுள்ளது. இந்த காட்சிகளை பேருந்தில் இருந்த நபர் ஒருவர் பதிவு செய்துள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. வழக்கமாக இரவு நேரங்களில் மட்டுமே அங்கு சாலைகளை கடக்கும் யானைகள் கோடைகாலம் என்பதால் தண்ணீர் தேடி வரத் துவங்கியுள்ளது.

Related Stories: