கோவை: சிறுவாணி சாலையில் சென்ற அரசுப் பேருந்தை குட்டியானை ஒன்று வழிமறித்த நிகழ்வு அரங்கேறியுள்ளது. கோவை மாவட்டம் சிறுவாணி சாலையில் உள்ள சாடிவயல் பகுதியில் 5 மலை கிராமங்கள் உள்ளது. இந்த மலை கிராமங்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை சாடிவயல் பகுதியில் இருந்து வெள்ளப்பதி நோக்கி அரசுப் பேருந்து ஒன்று சென்றுள்ளது.