கோவை: கோவை வெள்ளக்கிணர் அருகே உருமாண்டம்பாளையம், ஜோஸ் கார்டன் பகுதியில் வசித்தவர் விஜயலட்சுமி (49). இவரது மகன்கள் அர்ச்சனா (24), அஞ்சலி (22). கணவர் ஜோதிலிங்கம் 2 ஆண்டுக்கு முன் இறந்துவிட்டார். நேற்று அதிகாலை விஜயலட்சுமியின் வீட்டில் இருந்து புகை வந்தது. அக்கம் பக்கத்தினர் தகவலையடுத்து கவுண்டம்பாளையம் வடக்கு தீயணைப்பு படையினர் வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது சமையல் அறையில் விஜயலட்சுமியும், அவரது ஒரு மகளும், படுக்கை அறையில் மற்றொரு மகளும் உடல் கருகி இறந்து கிடந்தனர்.