கோவையில் பரபரப்பு யுபிஎஸ் வெடித்து வீட்டில் தீ தாயுடன் 2 மகள்கள் பலி: தந்தை இறந்த 2 ஆண்டில் சோகம்

கோவை: கோவை வெள்ளக்கிணர் அருகே உருமாண்டம்பாளையம், ஜோஸ் கார்டன் பகுதியில் வசித்தவர் விஜயலட்சுமி  (49). இவரது மகன்கள் அர்ச்சனா (24), அஞ்சலி (22). கணவர் ஜோதிலிங்கம் 2 ஆண்டுக்கு முன் இறந்துவிட்டார். நேற்று அதிகாலை விஜயலட்சுமியின்  வீட்டில் இருந்து புகை வந்தது. அக்கம் பக்கத்தினர் தகவலையடுத்து கவுண்டம்பாளையம் வடக்கு தீயணைப்பு படையினர் வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது சமையல் அறையில் விஜயலட்சுமியும், அவரது ஒரு மகளும், படுக்கை அறையில் மற்றொரு மகளும் உடல் கருகி இறந்து கிடந்தனர்.

தகவல் அறிந்த பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வந்து விசாரணை நடத்தினர். இதில் யுபிஎஸ் கருவியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அது வெடித்து தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இது குறித்து தீயணைப்பு துறையினர் கூறுகையில், ‘‘வீட்டின் ஹால் பகுதியில்  இருந்த யுபிஎஸ். கருவியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் மூவரும் இறந்துள்ளனர்’’ என்றனர். தந்தை இறந்த 2 ஆண்டில் அந்த குடும்பத்தைச்  சேர்ந்த 3 பேரும் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: