சின்னாளபட்டி : சின்னாளபட்டி சிறப்புநிலை பேரூராட்சி சார்பாக சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் மற்றும் குப்பை கழிவுகளை மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து அவற்றை உரமாக்குவதற்கு செம்பட்டி சாலையில் அஞ்சுகம் காலனி எதிரே வளம் மீட்பு பூங்கா உள்ளது. பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் மற்றும் துப்புரவு மேற்பார்வையாளர்கள் முறையாக உரக்கிடங்கிற்கு எடுத்துச்செல்லாமல் சின்னாளபட்டியில் உள்ள முக்கிய தெருக்களின் சந்திப்புகள் மற்றும் குளக்கரைகள், அரசு மருத்துவமனை காம்பவுன்ட் சுவர் பகுதி, காலி இடங்களில் கொட்டி தீவைத்து எரிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இது தவிர பேரூராட்சியில் பணிபுரியும் அருந்ததியினர் சமுதாயத்தினருக்கு தனியாக மயானம் உள்ளது. இந்த மயானத்தை துப்புரவு மேற்பார்வையாளர்கள் குப்பைக்கழிவுகளை கொட்டி எரிக்கும் இடமாக மாற்றி வருகின்றனர்.