சென்னை: சென்னை தரமணியில் டிஎல்எப் ஸ்டான்டர்டு சார்ட்டர்டு அலுவலக வளாகத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். 27 ஏக்கரில் கட்டப்படும் வளாகத்தில் ரூ. 5 ஆயிரம் கோடி முதலீடு செய்ய டிஎல்எப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 2025க்குள் ஐடி நிறுவனங்கள் பெருமளவு முதலீடு செய்யவும், 20 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர் தங்கம் தென்னரசு, பொன்முடி மற்றும் டிஎல்எப் அதிகாரிகள் பங்கேற்றனர்.