ஒரகடம் அருகே வேன் கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

ஸ்ரீபெரும்புதூர்: ஒரகடம் அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் காயமடைந்தனர். சென்னை அருகே கோவிலம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் நேற்று காலை ஆரணி அருகே உள்ள ஸ்ரீ படவேட்டம்மன் கோயிலில் நடைபெற உள்ள காதுகுத்து நிகழ்ச்சிக்காக வேனில்  சென்றுகொண்டிருந்தனர். அப்போது வண்டலூர்-வாலாஜாபாத் சாலை வழியாக சென்றுகொண்டிருந்தனர். ஒரகடம் அடுத்த வாரணவாசி அருகே சென்றபோது. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலை ஓரத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் 15க்கும் மேற்பட்டோருக்கு கை, கால், தலை பகுதியில் பலத்த காயமடைந்தனர். இந்த விபத்தை பார்த்த அருகில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனர். ஒரகடம், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் இருந்து வந்த 108 ஆம்புலன்ஸ் மூலம் காயமடைந்தவர்களை மீட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துமனையில் அனுமதித்தனர். அங்கு காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து தகவலறிந்த ஒரகடம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் வேன் ஓட்டிவந்த டிரைவர் தப்பி சென்று விட்டார்.

Related Stories: