திருத்தணி: தளபதி கே.விநாயகம் மகளிர் அறிவியல் மற்றும் கலைக் கல்லாரியில், மகளிர் தினவிழா ஒட்டி ஆசிரியைகள் இடையே பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. திருத்தணி தளபதி கே.விநாயகம் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் உலக மகளிர் தினவிழா கல்லுாரி தாளாளர் எஸ்.பாலாஜி தலைமையில் நேற்றுமுன்தினம் நடந்தது. கல்லுாரி முதல்வர் வேதநாயகி வரவேற்றார். இதில், கல்லுாரி பேராசிரியைகள், மாணவிகள் இடையே கோலம், கயிறு இழுத்தல், மியூஜிக்கல் சேர், லெமன் ஸ்பூன் உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.