தளபதி மகளிர் கலைக்கல்லூரியில் மகளிர் தினவிழா

திருத்தணி: தளபதி கே.விநாயகம் மகளிர் அறிவியல் மற்றும் கலைக் கல்லாரியில், மகளிர் தினவிழா ஒட்டி ஆசிரியைகள் இடையே பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. திருத்தணி தளபதி கே.விநாயகம் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் உலக மகளிர் தினவிழா கல்லுாரி தாளாளர் எஸ்.பாலாஜி தலைமையில் நேற்றுமுன்தினம் நடந்தது. கல்லுாரி முதல்வர் வேதநாயகி வரவேற்றார். இதில், கல்லுாரி பேராசிரியைகள், மாணவிகள் இடையே கோலம், கயிறு இழுத்தல், மியூஜிக்கல் சேர், லெமன் ஸ்பூன் உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.

மேலும் மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடந்தது. போட்டிகள் வெற்றி மாணவிகள் மற்றும் பேராசிரியைகளுக்கு பரிசுகளை தாய்கூடு நிறுவனரும் சமூகசேவகி திருநங்கை குணவதி மற்றும் சென்னை சமூகசேவகர் ராய் ஆகியோர் பரிசுகள் வழங்கி பாராட்டினர். மேலும் பேராசிரியைகளுக்கு பூச் செண்டுகள் கொடுத்து தாளாளர் பாலாஜி மகளிர் தினவாழ்த்துக்கள் தெரிவித்தார். 2 நாட்கள் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில், தமிழ்த்துறை தலைவர் சரஸ்வதி நன்றி கூறினார்.

Related Stories: