வாஷிங்டன்: உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அமெரிக்க நிறுவனங்களான பெப்சி, கோகோ கோலா, மெக்டொனால்டு மற்றும் ஸ்டார்பக்ஸ் ஆகியவை ரஷ்யாவில் தங்களது சேவையை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளன. இதுதொடர்பாக அமெரிக்க பன்னாட்டு துரித உணவு நிறுவனமான மெக்டொனால்டு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ரஷ்யாவில் உள்ள தனது 850 விற்பனை நிலையங்களின் அனைத்து சேவைகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறோம். இதனால் பாதிக்கப்படும் 62,000 ரஷ்ய தொழிலாளர்களின் சம்பளத்தை தொடர்ந்து அளிப்போம்’ என்று தெரிவித்துள்ளது.