கேரளா: பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறக்கப்படுகிறது. புதன் கிழமை முதல் சன்னிதானத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தானம் போா்டு அறிவித்துள்ளது. மாத பூஜையை முன்னிட்டு வரும் 12-ம் தேதி வரை நடை திறந்து பூஜைகள் நடைபெறும் என கூறப்படுகிறது. மேலும் மாத பூஜையின் தொடர்ச்சியாக 18-ம் தேதி பங்குனி உத்திர ஆறாட்டு விழா தொடங்க உள்ளது. பங்குனி மாத பூஜை மற்றும் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறந்து பூஜைகள் நடக்க உள்ளது.