அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை - திருச்சுழி ரோட்டில் தேவாங்கர் கலைக்கல்லூரி எதிர்புறம் டி.ஆர்.வி.சாலை உள்ளது. இப்பகுதியில் நகர்ப்புற ஆரம்ப சுகாதாரநிலையம் உள்ளது. இங்கு தினந்தோறும் பரிசோதனைக்காக நூற்றுக்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் வந்து செல்கின்றனர். மேலும் குழந்தைகளுக்கு தடுப்பூசி, கொரோனா தடுப்பூசி மற்றும் பல்வேறு சிகிச்சைகளுக்கும் பெண்கள் அதிகம் வருகின்றனர். அத்துடன் இப்பகுதியில் விரிவாக்கபகுதிகள் அதிகம் உள்ளது.மதுரை- தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் உள்ள கஞ்சநாயக்கன்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள விரிவாக்கப் பகுதி மக்கள் காந்திநகர் வந்து அருப்புக்கோட்டை நகருக்குள் வருவதற் டிஆர்வி சாலையைத் தான் அதிகம் பயன்படுத்துகின்றனர். இச்சாலை மழைக்காலங்களில் சேறும், சகதியுமாக இருந்தது.
இதனால் கஞ்சநாயக்கன்பட்டி கிராம ஊராட்சியிலிருந்து மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் 11 லட்ச ரூபாய் செலவில் சாலை அமைக்கும் பணி தொடங்கியது.