வாழப்பாடி: வாழப்பாடி அடுத்த ஏத்தாப்பூரில் 146 அடி உயரத்தில், உலகிலேயே மிக உயரமான முருகன் சிலை அமைக்கப்பட்டு உள்ளது. மலேசியா நாட்டின் தலைநகர் கோலாலம்பூர் அருகே பத்துமலை குகை கோயிலின் நுழைவு வாயிலில், உலகிலேயே மிக உயரமான முருகன் சிலை அமைந்துள்ளது. இது 140 அடி உயரத்தில் (42.7 மீட்டர்) வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த முருகன் சிலை, சர்வதேச அளவில் இந்துக்களின் புனித திருத்தலங்களில் ஒன்றாக உள்ளது. இந்நிலையில் மலேசியா நாட்டின் பத்துமலையில் உள்ள முருகன் சிலையை வடிவமைத்த, தமிழகத்தை சேர்ந்த திருவாரூர் தியாகராஜன் ஸ்தபதியாரின் குழுவினர், சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த ஏத்தாப்பூரில் முத்துமலை அடிவாரத்தில் சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையையொட்டி, மலேசியா பத்துமலை முருகன் சிலையை விட 6 அடி உயரம் கூடுதலாக 146 அடி உயரம் கொண்ட முருகன் சிலையை வடிவமைத்துள்ளனர்.