உக்ரைன் மீது ரஷ்யா 3வது நாளாக போரை தொடுத்து வருகிறது. இதனால் உக்ரைனில் நூற்றுக்கணக்கானோர் பலியாகி உள்ளனர். ரஷ்யாவின் குண்டு மழைக்கு பயந்து மக்கள் பதுங்கு குழிகளில் பதுங்கி உள்ளனர். உக்ரைனுக்கு ஆதரவாக எந்த நாடும் உதவிக்கு வரவில்லை. உலகம் முழுவதும் பெரும் பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தி உள்ள இந்த போரை நிறுத்துமாறு ரஷ்யாவுக்கு பல்வேறு நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன.