போரை நிறுத்த உதவுங்கள்; எலினா ஸ்விடோலினா உருக்கம்

உக்ரைன் மீது ரஷ்யா 3வது நாளாக போரை தொடுத்து வருகிறது. இதனால் உக்ரைனில் நூற்றுக்கணக்கானோர் பலியாகி உள்ளனர். ரஷ்யாவின் குண்டு மழைக்கு பயந்து மக்கள் பதுங்கு குழிகளில் பதுங்கி உள்ளனர். உக்ரைனுக்கு ஆதரவாக எந்த நாடும் உதவிக்கு வரவில்லை. உலகம் முழுவதும் பெரும் பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தி உள்ள இந்த போரை நிறுத்துமாறு ரஷ்யாவுக்கு பல்வேறு நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன.

இதனிடையே உக்ரைனைச் சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனை எலினா ஸ்விடோலினா, போரை நிறுத்த உதவுமாறு கோரிக்கை வைத்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பதிவில், என் இதயத்தில் ரத்தம் கசிகிறது. உக்ரேனிய மக்களுக்கு மற்றொரு தூக்கமில்லாத மற்றும் திகிலூட்டும் இரவு. போரை நிறுத்த எங்களுக்கு உதவுங்கள், என பதிவிட்டுள்ளார்.

Related Stories: