கமுதி: கமுதி அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,100 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே வேடங்கூட்டம் கிராமத்தை சேர்ந்தவர் சபரிராஜா. இவரது வீட்டில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கமுதி டிஎஸ்பி மணிகண்டனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து டிஎஸ்பி உத்தரவின்பேரில் கமுதி குற்றப்பிரிவு மற்றும் தனிப்பிரிவு போலீசார் விரைந்து சென்று சபரிராஜாவின் வீட்டில் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் 25 மூட்டைகளில் 1,100 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருள்கள் இருந்தன.