திருப்பூர்: திருப்பூர் கல்லூரி சாலை கொங்கணகிரி பகுதியை சேர்ந்தவர் மணி (55). சுமைப்பணி தொழிலாளியான இவர், மக்கள் நீதி மய்யம் கட்சியில் உறுப்பினராக இருந்து வந்தார். இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது திருப்பூர் மாநகராட்சி 36வது வார்டில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிட்டார். அப்போது தேர்தல் செலவுக்காக அக்கம் பக்கத்தினரிடம் ரூ.50 ஆயிரம் வரை கடன் வாங்கி உள்ளார். அந்த பணத்தை வைத்து தேர்தல் செலவு செய்தார். தேர்தல் முடிவு வெளியான போது அவர் 44 ஓட்டுகள் மட்டுமே வாங்கியிருந்தார். இதனால், அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார்.