எடப்பாடி சிறைக்கு சென்று கம்பி எண்ணுவது உறுதி: ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி

ஈரோடு: ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட அக்ரஹார வீதியில் உள்ள அரசு பள்ளியில் நேற்று காலை குடும்பத்துடன் வந்து வாக்களித்த தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் நிருபர்களிடம் கூறியதாவது:  இந்த தேர்தலில திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் மாபெரும் வெற்றியை பெறுவார்கள். தமிழகத்தின் மாண்பு, சுயமரியாதை, சமூக நீதி, கலாச்சாரம், மொழி காப்பாற்றப்பட வேண்டும் என்றால் மு.க.ஸ்டாலினின் கரங்களை வலுப்படுத்த வேண்டும்.

திமுக பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாக கூறிவரும் எடப்பாடி பழனிசாமியே பொய்யான நபர்தான். அவர் பொய்யை தவிர வேறு எதுவும் பேச மாட்டார். கண்டிப்பாக கொடநாடு, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமி சிறைக்கு சென்று கம்பி எண்ணுவது உறுதியாகி விட்டதால் இதுபோல எதையாவதை பேசி வருகிறார். இவ்வாறு ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறினார்.

Related Stories: