நெல்லை: நெல்லை உள்பட தமிழகம் முழுவதும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. நெல்லை மாநகராட்சியில் 55 வார்டுகளுக்கு 491 வாக்குச்சாவடிகளில் மின்னணு இயந்திரம் பயன்படுத்தி வாக்குப்பதிவு நடந்தது. வழக்கமாக இந்த இயந்திரத்தில் `யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை’ என விருப்பம் தெரிவித்தவர்கள் பயன்படுத்தும் வகையில் நோட்டா என்ற அமைப்பு செயல்படுத்தப்பட்டிருக்கும். ஆனால் தற்போது நகர்புற உள்ளாட்சி தேர்தலில் இந்த நோட்டா முறை, இயந்திரத்தில் செயல்படுத்தவில்லை.