சென்னை: துணை ராணுவப்படை பாதுகாப்புக்கு உத்தரவிட அதிமுக விடுத்த கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நேர்மையாகவும் நியாயமாகவும் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. கோவையில் அனைத்து சாவடிகளிலும் தேர்தல் நேர்மையாக நடத்தப்படும் என ஆணையம் உறுதிமொழி அளித்துள்ளது. ஆணையத்தின் உறுதிமொழிரய ஏற்று அதிமுக மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தவ் தொடர்பாக புதிய உத்தரவை பிறப்பிக்க தேவையில்லை எனவும் ஐகோர்ட் கூறியுள்ளது.