திருத்துறைப்பூண்டி: இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் இன்று திருத்துறைப்பூண்டியில் அளித்த பேட்டி: திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு மக்கள் தங்களின் பேராதரவை தெரிவித்து வருகின்றனர். நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதை போல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் மாபெரும் வெற்றி பெறுவோம் என்பதில் எந்த ஐயமும் இல்லை. தோல்வி பயத்தின் காரணமாக அவர்களது அணிக்கு நம்பிக்கையூட்டும் முயற்சியாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பாஜ தலைவர் அண்ணாமலை போன்றோர் தற்போதைய அரசுக்கு நாள் குறித்து பேசி வருகின்றனர். ஆனால் அந்த கட்சி தொண்டர்களோ, ஆகாத கதையை எடப்பாடி பேசி வருகிறார் என்று கூறுகின்றனர். எடப்பாடி கருத்தை அதிமுகவினரே ஏற்கவில்லை.